நெல்லையில் பள்ளிகளில் விஜயதசமியான இன்று சிறு குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி.
நெல்லை N.G.O. பி காலனியில் உள்ள TIME KIDS pre-school லில் வித்யாரம்பம்.






ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தையின் கல்வியில் அதிக அக்கறை செலுத்த விரும்புவது இயற்கையே. தன் குழந்தை பள்ளிக்கு செல்லும் அல்லது கல்வி கற்கத் துவங்கும் நாளை மிகவும் புனிதமாக கருதுவதும் இயல்பே. அந்த விசேஷமான தருணத்தை கொண்டாடும் நாள்தான் விஜயதசமி.
நவராத்திரியில் முப்பெருந்தேவிகளின் பூஜைகள் முடிந்த பின்பு வரும் பத்தாவது நாளான விஜயதசமியன்று தொடங்கப்படும் எந்த ஒரு காரியமும் அது சிறந்த வெற்றியளிக்கும் என்பது இந்தியர்களின் நம்பிக்கை. விஜயதசமியன்று குழந்தைகளுக்கு புதிய கலைகளான பாட்டு, இசைக்கருவி இசைத்தல், நடனம், ஒவியம் போன்ற கலைகளை கற்க பள்ளிகளில் சேர்ப்பார்கள். ஏற்கனவே இக்கலையை கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களும் தங்கள் குருவிற்கு சிறப்பு தட்சணை அளித்து சிறிது நேரமாவது இந்த நல்ல நாளில் அக்கலையை பயிலுவார்கள்.
இந்த மங்கலமான விஜயதசமியன்று தான் சிறு குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யப்படுகிறது. 2 முதல் 3 வயதுள்ள குழந்தைகளுக்கு பள்ளிக்க அது ப்ளே ஸ்கூலாக இருந்தாலும், செல்வதற்கு முன்பாக வரும் விஜயதசமியன்று வித்யாரம்பம் செய்யப்படுகிறது. தென்னிந்தியாவில் இந்நிகழ்ச்சி மிக முக்கியமாக பின்பற்றப்படுகிறது. இந்துக்கள் மட்டுமல்லாமல் கிறித்துவர்களும் தங்கள் குழந்தைகளுக்கு சர்சுகளில் வித்யாரம்பம் செய்வதை காண முடியும்.குழந்தையின் சுட்டுவிரலை பிடித்து தட்டில் உள்ள அரிசியின் மேல் தங்கள் தாய் மொழியின் எழுத்தை, பொதுவாக ஆவன்னாவை எழுத வைப்பார். சிலர் ஓம் ஸ்ரீ கனபதைபே நமஹ என்றும் எழுதுவர். இதன் பிறகு ஒரு தங்க மோதிரத்தை கொண்டு குழந்தையின் நாவில் அதே போல் எழுதுவார்கள். குழந்தை தடையின்றி எழுதவும், பேசவும் இந்த சுபநிகழ்ச்சி ஒரு ஆரம்பமாக இருக்கட்டும் என்ற முறையில் மிகவும் மகிழ்ச்சியாக இது கொண்டாடப்படுகிறது.