கீழ வல்லநாட்டில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்...
கீழ வல்லநாட்டில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்






தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் *(21.09.2022)* இன்று கீழவல்லநாடு டிமேஜ் பில்டர்ஸ் (பிரைவேட்) லிமிடெட் தொழிற்சாலையில் வைத்து நடைபெற்றது.
முகாமினை டிமேஜ் பில்டர்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் மேலாளர் *திரு.இரா.மகேஷ்குமார்* அவர்கள் துவக்கி வகித்தார்கள்.
டிமேஜ் நிறுவனத்தின் மனித வளப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் *திரு.ஆ.பிரபாகரன்* அனைவரையும் வரவேற்று பேசினார்.
இம்முகாமில் 70 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 9 நபர்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் *திரு.இசக்கி மஹாராஜன்* நன்றி கூறினார்.
இம்முகாமில் மாவட்ட காசநோய் மைய அரசு மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் திரு.மோகன் எக்ஸ்ரே நுட்பனர் திரு.கிறிஸ்டின் குமாரதாஸ், நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துனர் திருமதி.அய்யம்மாள், ஆய்வகநுட்பனர் செல்வி.உஷாராணி, சுகாதார பார்வையாளர் திருமதி.முத்துலட்சுமி, திரு.அரி பாலகிருஷ்ணன், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் *திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா* அவர்கள் செய்திருந்தார்.