top of page

வல்லநாடு துளசி கல்லூரியில் காசநோய் எதிர்ப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி...

வல்லநாடு துளசி கல்லூரியில் காசநோய் எதிர்ப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி







ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 17 முதல் 23 வரை காசநோய் எதிர்ப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இந்த வாரத்தை அனுசரிக்கும் விதமாக தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காச நோய் பிரிவு சார்பாக காசநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி துணை இயக்குனர் மருத்துவப் பணிகள் (காசநோய்) டாக்டர்.க.சுந்தரலிங்கம் அவர்கள் தலைமையில் வல்லநாடு துளசி கல்லூரியில் வைத்து 23.02.20202 (புதன்கிழமை) அன்று முற்பகல் 10.30 மணியளவில் நடைபெற்றது.


மாவட்ட காசநோய் மைய தீர்வு முறை அமைப்பாளர் குப்புசாமி அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.


துளசி கல்லூரி நர்சிங் ஆசிரியர் அன்புராஜ் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.


துணை இயக்குனர் மருத்துவப்பணிகள் (காசநோய்) டாக்டர்.க.சுந்தரலிங்கம் அவர்கள் பேசுகையில், இந்தியாவில் காசநோயினால் 5 நிமிடத்திற்கு 2 பேர் மறுப்பதாகவும், அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவ நிலையங்களை அனுகி சளி மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை செய்திட வேண்டும். காசநோய் என கண்டறியப்பட்டவர் முழு கால அளவிற்கான சிகிச்சையை இடைவிடாது எடுத்துக் கொள்ள வேண்டும். இடையில் சிகிச்சையை நிறுத்தினால் இன்னல் தரக்கூடிய வீரிய காசநோய் உருவாகி மரணத்தை ஏற்படுத்துவதுடன் குடும்பத்தையும் பாதிக்கும் என கூறினார். முடிவில் மாணவியர்களுக்கு காசநோய் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் அளிக்கப்பட்டது.


துளசி கல்லூரி நர்சிங் மாணவி சுப்புலட்சுமி அவர்கள் நன்றி கூறினார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தான சங்கர் வேல், செல்லப்பா, நர்சிங் ஆசிரியை எழிலரசி, சுகாதாரத் துறை பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இதற்கான ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா அவர்கள் செய்திருந்தார்.

124 views0 comments
bottom of page