வல்லநாட்டில் ஏழை காசநோயாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்



தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக ஏழை காசநோயாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி *22.04.2020 (புதன்கிழமை) அன்று முற்பகல் 10.30* மணியளவில் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து வட்டார மருத்துவ அலுவலர் *டாக்டர்.மு.சுந்தரி M.B.B.S.,* அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சித்த மருத்துவர் அலுவலர் *டாக்டர்.ச.செல்வகுமார் M.D.,* அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவும், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளனர்.
இந்த சூழ்நிலையில் ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் உள்ள ஏழை காசநோயாளிகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் மளிகை சாமான்கள் ஆகியவை அடங்கிய தொகுப்பை *AAA* இஞ்சினியரிங் கன்சல்டன்ஸ் நிர்வாக இயக்குநர் *Er.A.அப்துல் ஆஷிக் M.E.,* அவர்கள் வழங்கினார்கள்.
இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் *திரு.பெரியசாமி* மற்றும் காசநோயாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் *திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா* அவர்கள் செய்திருந்தார்.