தென்காசி மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

தென்காசி மாவட்டம், இலத்தூர், ஆய்க்குடி, கடையநல்லூர் மற்றும் சேர்ந்தமரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் ஆடு மற்றும் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட ஊர்மேலழகியான் பகுதியை சேர்ந்த கோட்டையம் என்பவரின் மகன் முத்துக்குமார் (26) என்ற நபரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அச்சன்புதூர் வட்ட காவல் ஆய்வாளர் திருமதி.வேல்கனி அவர்களுக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்கள் அறிவுறுத்தியதன் பேரில்,மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில்,மேற்படி கோட்டையன் என்பவரின் மகன் முத்துக்குமார் (26) என்ற நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறையில் காவல் ஆய்வாளர் திருமதி.வேல்கனி அவர்கள் சமர்பித்தார்.