தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரம் ...





செய்திக் குறிப்பு
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 23-12-2020 முதல் 29-12-2020 முடிய மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த ஆண்டு சட்டபேரவையில் அறிவித்தமைக்கிணங்க ஆட்சி மொழிச்சட்ட வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பொதிகைத் தமிழ்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள், தமிழ் வளர்ச்சித் துறை நெல்லை அரசு அருங்காட்சியகம் பங்குபெற்ற ஆட்சிமொழி சட்ட வரா நிகழ்வு இன்று (23-12-2020) தொடங்கி ஒருவார காலம் நடைபெறும்.
தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்டு 27-12-1957 முதல் செயல் பாட்டுக்கு வந்தது. அதன்படி தமிழ் ஆட்சிமொழியாக அரியணையேறியது. அதுமுதல் அரசு அலுவலகங்களில் அனைத்து அலுவல் நடவடிக்கைகளும் தமிழில்தான் நடைபெற வேண்டுமென ஆணையிடப்பட்டது. அன்னைத் தமிழாம் ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட்ட இந்நாளினை தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் ஆட்சிமொழி வாரமாக கொண்டாடி வருகிறது. அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய வேண்டுமெனில் அம்மக்கள் பேசுகிற மொழியில் நிருவாகம் நடைபெற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
தமிழ்நாட்டில் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை என்ற புரட்சிக் கவிஞன் பாரதிதாசன் கனவை நிறைவேற்றிடும் வகையில் தமிழ் நாட்டிலுள்ள வணிக நிறுவனங்களின் பெயர்பலகைகளை முழுவதும் தமிழில் அமைக்கவேண்டும் வலியுறுத்தி தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ் அமைப்புகள் மூலம் கடைகள் வணிக நிறுவனங்களில் துண்டு அறிக்கைகள், ஒட்டுத் தாள்கள் மூலம் தொடர்ந்து ஒருவார காலம் பரப்புரை செய்யப்படும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தீநுண்மி காலத்திலும் இதே போன்று கடைகள் வணிக நிறுவணங்களில் தமிழ் பெயர்பலகை அமைக்க வலியுறுத்தி பரப்புரை செய்யப்பட்டது. வணிக பெருமக்களும் அரசின் இச்சீரியத்திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறும் அன்னைத் தமிழாம் ஆட்சிமொழியில் தங்;களின் நிறுவணங்களின் பெயர்பலகைகளை அமைத்திடுமாறும் கேட்டுக்கொள்கிறேம்.
இந்த அட்சிமொழி சட்டவார நிகழ்வில் தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் திரு.கா.பொ.இராசேந்திரன் அவர்கள் தலைமையும், நெல்லை மாவட்ட அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் திருமதி சிவசத்தியவள்ளி அவர்கள் சிறப்புரையும், பொதிகை தமிழ் வங்க நிறுவனர் திரு.கவிஞர் பேரா அவர்கள் முன்னிலை வகித்தார், நிகழ்வில் தமிழ் வளர்ச்சித் துறை பணியாளர்கள், அருங்காட்சியக பணியாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்கள் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
நிறைவாக தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் திரு.கா.பொ.இராசேந்திரன் தலைமையில் வாகனங்களிலும் வணிக நிறுவனங்களிலும் ஒட்டுத்தாள் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.