top of page

மாவட்ட காவல் துறையினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.




திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .நெ.மணிவண்ணன் இ.கா.ப மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்து வரும் அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் மாதம் நடக்கும் ஆய்வு கூட்டத்தின்போது வெகுமதி வழங்கியும் நற்சான்று வழங்கியும் மேலும் அவர்களை நேரில் வரவழைத்து பாராட்டி வருகிறார்.


இந்நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவலர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சிறப்பாக மற்றும் மெச்சத் தகுந்த பணி செய்த 27 காவலர்களை தனித்தனியாக வான் செய்திகள் மூலம் அழைத்து அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் இச்செயல் காவலர்கள் மத்தியில் மகிழ்ச்சியும் , மேலும் இதுபோன்ற செயல்களைச் செய்ய உத்வேகமாக அமைந்துள்ளது.

20 views0 comments
bottom of page