திருநெல்வேலி தாழையூத்து கொலை வழக்கில் தொடர்புடையவர்களை மலைப் பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் தேடும் பணி
கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய ட்ரோன் கேமரா மூலம் தேடுதல் பணியில் ஈடுபடும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர். திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை.
தாழையூத்து கொலை வழக்கில் நல்லதுரை, சங்கிலிபூதத்தான், குருசச்சின் மற்றும் அம்மு என்ற அம்மு வெங்கடேஷ் ஆகிய நான்கு எதிரிகள் இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய எதிரிகள் சிங்கிகுளம் பெத்தானியா மலைப் பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப., அவர்கள் , ட்ரோன் கேமரா மூலம் தேடுதல் பணியில் ஈடுபடுமாறு தனிப்படை காவல் துறையினருக்கு உத்திரவிட்டார். இதனடிப்படையில் DSP திரு.ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் பெத்தானியா மலை பகுதிக்கு சென்று ட்ரோன் கேமரா மூலம் எதிரிகளை தேடி வருகின்றனர்.