நெல்லையில் 72வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது...


நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் 72வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலப்பாளையம் மண்டலத்தின் உதவி செயற்பொறியாளர் லெனின் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது, கண்காணிப்பாளர் காசி விஸ்வநாதன், உதவி வருவாய் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் சங்கரநாராயணன், இளநிலை பொறியாளர் ஜெய கணபதி, உதவி பொறியாளர் சிவசுப்பிரமணியன், உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.


அருங்காட்சியகத்தில் குடியரசு தின விழா:
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி தேசிய கொடியை ஏற்றினார். பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர்.பே. இராஜேந்திரன், கவிஞர். சுப்பையா, ஓவியர் . கிருஷ்ணவேணி மற்றும் அருங்காட்சியக பணியாளர்கள் உடன் இருந்தனர்.