top of page

கருப்பசாமி வேடமணிந்த கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை ராமநாதபுரம் ஆட்சியர் துவக்கி வைத்தார்





கருப்பசாமி வேடமணிந்த கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆட்சியர் துவக்கி வைத்தார்

பாமர கிராம மக்களையும் கவரும் விதத்தில் அமைந்திருந்த நூதன கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்


கொரானா நோய்த்தொற்று பரவலின் இரண்டாம் அலை தமிழகம் முழுவதும் மளமளவென பரவி பெரும் பாதிப்பை உண்டாக்கி வந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 158 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர் அவர்களில் 15 ஆயிரத்து 346 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் தற்போது 2557 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இவர்களில் 255 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.


இந்த நிலையில் நோய்த்தொற்று பரவல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் ராமநாதபுரத்தில் இன்று கொரோனா நோய்த்தொற்று குறித்து குறி சொல்லும் நவீன கோடாங்கி என்கிற நூதன பிரச்சாரம் ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடைபெற்றது


இந்த குறிசொல்லும் கோடாங்கியின் பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாவட்ட எஸ்பி கார்த்திக் ஆகியோர் துவக்கி வைத்தனர்


கொரோனா எப்படிப் போகுமென்று பக்தன் ஒருவன் கேட்பதற்கு மாஸ்க் அணியாமல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கொரானா ஒழியாது என்று கோடாங்கி குறி சொல்வது போலவும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோடாங்கி குறி சொல்லும் காட்சிகள் அனைவரையும் கவர்வதாக அமைந்திருந்தது பாமர கிராமப்புற மக்களையும் கவரும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழிப்புணர்வு பிரசாரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்பி யால் துவக்கி வைக்கப்பட்டது

8 views0 comments
bottom of page