top of page

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் நடத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்...


தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன், இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.


இதன்படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (22.02.2023) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் இ‌.கா.ப., அவர்களை, நேரில் சந்தித்து 19 மனுக்களை பெற்று மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்கள்.* அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


மேலும் முந்தைய வாரங்களில் நடந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் நிலுவையில் இருந்த 23 மனுக்களின் மனுதாரர்கள் மீண்டும் வரவழைக்கப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. மாரிராஜன் அவர்கள், மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜு அவர்கள், மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயபால் பர்னபாஸ் அவர்கள் தலைமையில் மனுக்கள் விசாரிக்கப்பட்டு 19 மனுக்கள் முடிக்கப்பட்டுள்ளது.*

10 views0 comments
bottom of page