பொருநை நெல்லை புத்தக கண்காட்சியில் பயிற்சி வகுப்புகள்
பொருநை நெல்லை புத்தக கண்காட்சியில் பயிற்சி வகுப்புகள்







பொருநை நெல்லை புத்தக கண்காட்சியில் ஒரு சிறப்பு நிகழ்வாக நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பாக பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பயிற்சி வகுப்பின் ஒன்பதாம் நாளான இன்று கழிவுப் பொருட்களில் இருந்து கலைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி நடத்தப்பட்டது. சமூக ஆர்வலர் இராஜ.மதிவாணன் அவர்கள் இப்பயிற்சியை துவங்கி வைத்தார்.
கைவினைக் கலைஞர் லெனின் இப்பயிற்சியை நடத்தினர். காய்ந்த இலைகள் மற்றும் சிப்பிகள் கொண்டு அழகிய கலை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நாளை கல்வெட்டு வாசித்தல் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சியில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம் என நெல்லை மாவட்ட காப்பாட்சியர் திருமதி. சிவ. சத்திய வள்ளி தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.