திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மியாவாக்கி முறையில் 500 மரக்கன்றுகள்...
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 500 மரக்கன்றுகள் ஜப்பான் நாட்டின் மியாவாக்கி முறையில் நடப்பட்டது



திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் 500 மரக்கன்றுகள் ஜப்பான் நாட்டின் (Miyawaki) மியாவாக்கி முறையில் அமைக்க *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப.,* அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மியாவாக்கி முறை இடைவெளி இல்லா அடர் காடு என்ற தத்துவத்தின்படி, வெவ்வேறு மரக்கன்றுகளை ஒரே இடத்தில் வைப்பது இதன் அடிப்படை நோக்கமாகும். இந்த முறை குறிப்பிட்ட இடத்தில் ஆழமான குழிகள் தோண்டி அதில் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடும் முறை மியாவாக்கி என்று அழைக்கின்றனர். இதன் மூலமாக அந்த நிலத்தின் வெப்ப நிலை குறையவும், காற்றில் ஈரப்பதத்தை தக்க வைக்கவும், பறவைகள் வாழ்விடமாகவும், பல்லுயிர் சூழல் உருவாக உதவுகிறது. மேலும் இதன் சிறப்பம்சம் வெவ்வேறு வகையான மரங்கள் நடும் போது மரங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து போட்டி போட்டு குறுகிய காலத்தில் அதிகப்படியான வளர்ச்சியை தருகிறது.
இதன் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலக தோட்டத்தில் மகாகனி, ஈட்டி, வேங்கை, புங்கை, வேம்பு, செம்மரம், இலுப்பை, நீர்மருது வகையான 500 மரக்கன்றுகளை ஜப்பான் நாட்டின் மியாவாக்கி முறையில் நட்டுவைக்கும் முறை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் 25.02.2023 நேற்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.