கோடீஸ்வரன் நகர் பகுதியில் ரூபாய் ஆறு லட்சத்து நாற்பத்து ஏழாயிரம் செலவில் புதிய மின் மாற்றி

தமிழ் நாடு மின்சார வாரியம் திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம் நகர்புற கோட்டம் பேட்டை உபகோட்டம் பிரிவிற்குட்பட்ட கோடீஸ்வரன் நகர் பகுதியில் நிலவிய குறைந்தழுத்த மின்பளுவை அதிகரிப்பதற்காக ரூபாய் ஆறு லட்சத்து நாற்பத்து ஏழாயிரம் செலவில் புதிதாக ஒரு மின் மாற்றி அமைத்து மின்விநியோகம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பேட்டை உதவி செயற்பொறியாளர் திரு. ஷாஜஹான், பேட்டை உதவி பொறியாளர் திரு. சரவணன், கட்டுமானம் மற்றும் மேம்பாடு உதவி பொறியாளர் திருமதி. ஜன்னத்துல் சிபாயா, மின்வாரிய பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.