top of page

திருநெல்வேலி -தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள குழிகளை இளைஞர்களே முன்வந்து சீர் செய்தனர்











திருநெல்வேலி -தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையின் பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாக இருப்பதால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்ப்பட்டு வருகிறது.


பழுதான சாலையை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சரி செய்யாமல் அலட்சியம் செய்ததால் பசுமை தமிழ் தலைமுறை அமைப்பின் நிறுவனர்/தலைவர்

மு.சுகன் கிறிஸ்டோபர் தலைமையில் , பசுமை தமிழ் தலைமுறை அமைப்பைச்சேர்ந்த இளைஞர்கள் ரா.அருண், பே.நவீன், வே.தங்கபாண்டி, செ.சீனிவாசன், ஆகியோர் தானாக முன்வந்து வசவப்புரம் சொதனை சாவடி அருகே சாலையில் உள்ள குழியை சிமெண்ட் கலவை போட்டு சரி செய்தனர்.

இளைஞர்களின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.


20 views0 comments
bottom of page