பாளை அழகியமன்னார் இராஜகோபாலசுவாமி திருக்கோவில் திருத்தேர் வெள்ளோட்டத்தை முன்னிட்டு மின்தடை அறிவிப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருநெல்வேலி நகர்புற விநியோகம் செயற்பொறியாளர்
சு. முத்துக்குட்டி BE., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
பாளை அழகியமன்னார்
இராஜகோபாலசுவாமி திருக்கோவில் திருத்தேர் வெள்ளோட்டம் விடும் 28.02.2022 நாள்
அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளுக்கு மின்விநியோகம்
இருக்காது என்ற விபரம் பொதுமக்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: பாளையங்கோட்டை பெருமாள் கோவில் மேல
ரதவீதி, கீழரத வீதி, வடக்கு ரத வீதி, தெற்கு பஜார், கோபாலசுவாமி கோவிலை சுற்றியுள்ள
வீதிகள், செண்பகவன தெரு , சிவன்கோவில் மேல ரதவீதி, காய்கறி கடைத்தெரு, சிவன்
கோவில் தெற்கு மாடவீதி மற்றும் பட்டு பிள்ளையார் கோவில் தெரு.