திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கபசுர சூப்...




திருநெல்வேலி மாநகராட்சி ஆளுகையில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் கோவிட் 19 (கொரோனா) வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து கொள்ளவும்
காஞ்சிபுரத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மஹா யோகம் யோகா அமைப்பும் நம் தாமிரபரணி அமைப்பும் இணைந்து இந்திய பாரம்பரிய மருத்துவ அறிவியல் குழுவின் மூலம் நிரூபணம் செய்யப்பட்ட கபவாத சூப் வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் நடந்தது. அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மாநகராட்சி உதவி ஆணையாளர் சுகிபிரேமலா கப சுர சூப் வழங்கினார். உதவி நிர்வாக பொறியாளர் லைனின், சுகாதார அலுவலர் சாகுல்ஹமீது, உதவி வருவாய் அலுவலர் மணிகண்டன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்..
News sponser : https://lapureherbals.in/
