top of page

திருநெல்வேலி மாவட்டம், மானூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்பு திறப்பு விழா.






தமிழக அரசு உத்தரவின் பேரில் மானூர் காவல் நிலையம் அருகில் ரூபாய் 5.5கோடியில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், மற்றும் காவலர்களுக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள 52 குடியிருப்புகளை இன்று *மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் காணொளி மூலம் திறந்து வைத்தார்.*


மேற்படி புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புகளை *திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன்,இ.கா.ப.,* அவர்கள் பார்வையிட்டு,ரிப்பன் வெட்டி, காவலர் குடியிருப்பில் குத்து விளக்கேற்றி வைத்தார்.


*இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெபராஜ், கங்கைகொண்டான் காவல் ஆய்வாளர் திரு.பெருமாள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் உடன் இருந்தனர்.*

13 views0 comments
bottom of page