மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு நெல்லையில் பறக்கும்படை சோதனை தீவிரம்...



தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19 ஆம் தேதி, ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடைபெறும் இடங்களில் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதை அடுத்து தமிழகம் முழுவதும் 1,650 பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள 4 மண்டலங்களிலும் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வாகன தணிக்கை முழுவதையும் வீடியோவாக பதிவுசெய்துவருகின்றனர்..