top of page

கோவில்பட்டி ஊரணி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோயாளிகளுக்கு ஆலோசனை முகாம்...







தேசிய காசநோயகற்றும் திட்டம் கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக கோவில்பட்டியில் காசநோய்க்கு மாத்திரை உண்பவர்களுக்கு ஆலோசனை முகாம் ஸ்ரீராம் நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. மருந்தாளுனர் மகாராசி அனைவரையும் வரவேற்றார் மருத்துவ அலுவலர் ராமமூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது


காசநோய் முற்றிலும் குணப்படுத்த கூடிய நோய் ஆறுமாத காலம் தொடர்ந்து மாத்திரை உட்கொள்ள வேண்டும் காசநோய் காற்றின் மூலம் பரவுவதால் வீட்டில் உள்ள அனைவரும் காசநோய் பரிசோதனை செய்வது மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார் மேலும் புரதம் சார்ந்த பயறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் என்று கூறினார்


காசநோயாளிகள் வீட்டில் ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் இருப்பின் அவர்களுக்கு காசநோய் பரிசோதனை செய்யவேண்டும் என்றார் கூறினார்


காசநோய் பாதித்த நபர்கள் கண்டிப்பாக வீட்டில் இருக்கும் போதும் முககவசம் அணிவது மிக அவசியம் என்று வலியுறுத்தினார் பொதுமக்களிடம் காசநோய் அறிகுறிகளுடன் எவரேனும் தென்பட்டால் அவர்களை மருத்துமனைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்


மருத்துவ அலுவலர் ஸ்ரீராம் பேசுகையில் சர்க்கரை நோயாளிகள் காகநோய் பரிசோதனை செய்வதன் அவசியம் குறித்து பேசினார்


இந்த ஆலோசனை முகாமில் காசநோயாளிகள் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன், ஆய்வக நுட்புனர் மகேஸ்வரி, செவிலியர்கள் தன லட்சுமி,கவிதா மருத்துவமனை பணியாளர் காளியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காசி விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்தார்

5 views0 comments
bottom of page