கொக்கிரகுளம் துணைமின்நிலையத்தில் 05.04.2022 ல் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பாரமரிப்பு பணி - மின்தடை

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக திருநெல்வேலி நகர்புற விநியோக செயற்பொறியாளர்
முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கொக்கிரகுளம் 33/11KV துணைமின்நிலையத்தில் 05.04.2022 (செவ்வாய்க்கிழமை)
அன்று மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அன்று காலை 09:00 மணி முதல் 05:00
மணி வரை
மின்விநியோகம் இருக்காது. மேலும் மின்னோட்டத்திற்கு இடையூறாக உள்ள
மரக்கிளைகள் போன்றவற்றை அகற்றி மின்பாதையை பாரமரிக்க ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று
பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம்,
வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, வண்ணார்பேட்டை (முழுவதும்), இளங்கோ நகர், பரணி நகர்,
திருநெல்வேலி-சந்திப்பு முதல் மேரி சார்ஜென்ட் பள்ளி வரையிவான திருவனந்தபுரம் சாலை, பாளை
புதுப்பேட்டை தெரு மற்றும் சுப்ரமணியபுரம்.