top of page

கயத்தாறு அருகே காசநோய் விழிப்புணர்வு முகாம்...


தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக அய்யனார்ஊத்து கிராமத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

இம் நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து தலைவர் பால்பாண்டி தலைமை வகித்தார்

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மாரிமுத்து அவர்கள் பொது சுகாதாரம் பற்றியும் வாழ்வில் அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய சுகாதார நெறிமுறைகள் பற்றி எடுத்துக் கூறினார்.


முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசநோய் அறிகுறிகள் பரவும் தன்மை பற்றி எடுத்துக் கூறினார். ஏப்ரல் மாதம் அய்யானார்ஊத்து கிராமத்தில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலமாக காசநோய் கண்டறியும் முகாம் நடைபெறவுள்ளது ஆகவே பொதுமக்கள் காசநோய் முகாமில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.

மேலும் சுகாதார ஆய்வாளர் ராஜசேகர் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் பற்றி பேசினார் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்ல‌வேண்டும் என்று அறிவுறுத்தினார்.


இம்முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் விஜயகுமார், கோபாலகிருஷ்ணன் கிராம சுகாதார செவிலியர் விஜயலட்சுமி, இடைநிலை சுகாதார பணியாளர் பிரேமா ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் மற்றும் பஞ்சாயத்து தலைவரும் இனைந்து ஏற்பாடு செய்திருந்தனர்....

5 views0 comments
bottom of page