மின் பாதுகாப்பு சாதனம் ( RCCD) பொருத்தி மின் விபத்துகளை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரம்..





தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பாக கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் கல்லிடைக்குறிச்சி வினியோக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் நுகர்வோர்களுக்கு மின் சாதனங்களை கையாளும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் மின் பாதுகாப்பு சாதனம் ( RCCD ) பொருத்தி மின் விபத்துகளை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. மின் நுகர்வோர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரம் ( நோட்டீஸ்) வழங்கி விளக்கிக் கூறப்பட்டது இந்நிகழ்ச்சியில் கல்லிடைக்குறிச்சி உப கோட்ட உதவி செயற்பொறியாளர் சங்கர் உதவி மின் பொறியாளர் சட்டநாதன் பணியாளர்கள் ஜெயப்பிரகாஷ் சப்பனிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்