வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட களக்காடு, பணகுடி துணைமின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வள்ளியூர் விநியோக
செயற்பொறியாளர் வளன் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
வருகின்ற 07.04.2022 வியாழக்கிழமை அன்று வள்ளியூர் மின்வாரிய
கோட்டத்திற்குட்பட்ட 110/ 11 KV களக்காடு மற்றும் 110/ 11KV பணகுடி துணை
மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று கலை
09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது. மேலும்
மின்விநியோகத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் போன்றவற்றை அகற்றி
மின்பாதையினை பராமரிக்க ஒத்துழைப்பு தரும்படி பொதுமக்களை
கேட்டுக்கொண்டுள்ளார்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
கோதைச்சேரி, வண்ணியன்குடியிருப்பு, சிங்கிகுளம்,
களக்காடு, காடுவெட்டி, வடமலைசமுத்திரம், கள்ளிகுளம், மீனவன்குளம்,
கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம் மற்றும் பணகுடி பகுதிகளுக்குட்பட்ட
பணகுடி,
காவல்கிணறு, சிவகாமிபுரம், ரோஸ்மியாபுரம், தளவாய்புரம்,
தண்டையார்குளம், கும்பிகுளம், மருதப்பபுரம், பாம்பன்குளம், கலந்தபனை, மற்றும்
தெற்கு வள்ளியூர்.