தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 400 பேருக்கு மஹா கப வாத சூப் ...


திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்துக்குட்பட்ட என்.ஜி.ஓ. பி காலனியில் NGO B காலனி குடியிருப்போர் நலச்சங்கத்தின் முன்னிலையில் மஹா யோகம் யோகா அமைப்பின் சார்பில் 144 தடைக்காலத்தில் கொரோனா தடுப்பு பணியில் தன்னலம் கருதாமல் பணியாற்றிவரும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 400 பேருக்கு யோகா அமைப்பின் பயிற்சி ஆசிரியர் திரு. வெற்றி வேந்தன் அவர்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும் மஹா கப வாத சூப் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் NGO B காலனி குடியிருப்போர் நலச்சங்கதலைவர் A.முத்துசாமி, உப தலைவர் ராமநாதன், செயலாளர் Dr. பத்மசுப்பிரமணியன், இணைச் செயலாளர் T.சரவணன், பொருளாளர் T.ரங்கநாதன், சங்கரன், மார்ஷல்,S.R.செந்தில், ராமசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.