நாணல்காட்டில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்






தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் (26.04.2023) இன்று வல்லநாடு அருகேயுள்ள நாணல்காடு கிராமத்தில் நடைபெற்றது.
முகாமினை நாணல்காடு ஊராட்சி மன்றத் தலைவர் திரு.ஆ.இசக்கிமுத்து அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் திரு.ச.இசக்கி மஹாராஜன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையின் கள இயக்குநர் திரு.விஜயகுமார் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள்.
இம்முகாமில் 35 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 7 நபர்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா அவர்கள் நன்றி கூறினார்.
இம்முகாமில் எக்ஸ்ரே நுட்பனர் திரு.கிறிஸ்டின் குமாரதாஸ், இருட்டறை உதவியாளர் திரு. எட்டையா, சுகாதார பார்வையாளர் திருமதி.முத்துலட்சுமி, நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துனர் திருமதி.அய்யம்மாள், ஆய்வக நுட்புனர்
திருமதி.உஷாராணி, திரு.அரி பாலகிருஷ்ணன், டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கிராம வளர்ச்சி அலுவலர் திரு.தனுஷ்கோடி, அவார்டு டிரஸ்ட் முன் மாதிரி கல்வியாளர் திருமதி.ஈஸ்வரி, அங்கன்வாடி உதவியாளர் திருமதி.மாரியம்மாள், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை ஆகியோர்கள் இணைந்து செய்திருந்தார்கள்.