தூத்துக்குடியில் கோவிட்-19 விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்...


இந்திய அரசு, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், மக்கள் தொடர்பு கள அலுவலகம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடைபெற்ற கோவிட்-19 விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப. அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து துண்டு பிரசுரங்களையும் வழங்கினார். நகர் நல அலுவலர் மருத்துவர் அருண்குமார், மத்திய மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் கள விளம்பர உதவி அலுவலர் போஸ்வெல் ஆசீர், சுகாதார அலுவலர் ஸ்டாலின் மற்றும் பலர் உடன் இருந்தனர். மேலும் கோவிட்-19 குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.