மாநகராட்சி 38 வது வார்டு கருப்பந்துறை பகுதி வேத கோவில் தெருவில் கபசுர குடிநீர் பாக்கெட் விநியோகம்
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட 38 வது வார்டு கருப்பந்துறை பகுதி வேத கோவில் தெருவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கபசுர குடிநீர் பாக்கெட் பெடரல் வங்கி மற்றும் பாரதி சேவா கேந்திரம் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் சுகிபிரேமலா, சுகாதார அலுவலர் சாகுல்ஹமீது, சுகாதார ஆய்வாளர் சங்கரநாராயணன், சேவாபாரதி அமைப்பின் ராம்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்...




