நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம்...





திருநெல்வேலி மாநகராட்சி பாளை மண்டல அலுவலகத்தில் உள்ள ஆதார் பதிவு மையத்தில் காத்திருக்கும் பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ள பென்ச் கால் உடைந்து செங்கல் முட்டு கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் காத்திருக்கும் பகுதியில் ஒரு மின் விசிறி கூட இல்லாமல் கோடை காலத்தில் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை கோடை வெயிலின் தாக்கத்தில் அவதி. முதியோர்கள் மற்றும் ஊனமுற்றோர் பயன்படுத்தும் வகையில் சாய்தள வசதி செய்யப்படவில்லை. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...