திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு வாகன பிரச்சார தொடக்க நிகழ்ச்சி...





திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் இன்று (28.01.2022) இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் திருநெல்வேலி மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எல்.இ.டி. கொரோனா விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் திரு. பா. விஷ்ணு சந்திரன், இ.ஆ.ப. அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில் மாநகராட்சி நல அலுவலர் மரு. வி. ராஜேந்திரன், மத்திய மக்கள் தொடர்பு கள விளம்பர அலுவலர் திருமதி. ஜூனி ஜேக்கப் மற்றும் கள விளம்பர உதவி அலுவலர் திரு. ஜெ. போஸ் வெல் ஆசீர் உடன் இருந்தனர்.