வல்லநாட்டில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு காசநோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது...
தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் சாராள் தக்கர் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் - முன்னாள் மாணவியர்கள் சங்கம் இணைந்து கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு காசநோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (15.12.2022) வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து மருத்துவ அலுவலர் டாக்டர்.ரா.கிருஷ்ணவேணி தமிழ் செல்வி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.





முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள்.
துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அவர்களின் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் திரு.மா.மதுரம் பிரைட்டன், வல்லநாடு சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.ச.செல்வகுமார் ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள்.
சாராள் தக்கர் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர்களான முனைவர்.நிர்மலா தங்கராஜ், திருமதி. எஸ்தர் ராஜம் லயணல், திருமதி.சிந்தியா பால், ஆகியோர்கள் இணைந்து ஏழை, எளிய காசநோயாளிகளுக்கு (அரிசி, பருப்பு, எண்ணெய், சத்து பொருட்கள், போர்வை, வேஷ்டி, சேலை, துண்டு) உள்ளிட்ட நலத்திட்ட பொருட்களை வழங்கினார்கள்.
மருத்துவ அலுவலர் டாக்டர்.ரா.கிருஷ்ணவேணி தமிழ் செல்வி அவர்கள் பேசுகையில், திருநெல்வேலி சாராள் தக்கர் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள்- முன்னாள் மாணவியர்கள் சங்கம் சார்பில் வல்லநாடு காசநோயாளிகளுக்கு சத்துணவு, புத்தாடை மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து 6வது ஆண்டாக செய்து வரும் அவர்களுக்கு நன்றிகளையும், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காசநோயை ஒழிக்க அரசுத்துறை மட்டுமல்லாமல் தனியார் துறையும் இணைந்து செயல்படுவதன் மூலம் 2025-க்குள் காசநோயில்லா தூத்துக்குடி மாவட்டம் உருவாகும் என கூறினார்கள்.
மாவட்ட காச நோய் மைய தீர்வு முறை அமைப்பாளர் திரு.ச.குப்புசாமி, அரசு மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் திரு.பா.மோகன் ஆகியோர்கள் திட்ட விளக்கவுரை ஆற்றினார்கள்.
இறுதியாக
டி.ஆர்.டி.பி. ஒருங்கிணைப்பாளர் திரு.செ.மாரியப்பன் அவர்கள் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் திரு.செல்லப்பா, மருத்துவமனை பணியாளர்கள் திரு.வேம்பன், திருமதி.அழகம்மாள், சுகாதாரத் துறை பணியாளர்கள், காசநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு, சாரள் தக்கர் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் - முன்னாள் மாணவியர்கள் சங்கம் ஆகியார்கள் இணைந்து செய்திருந்தார்கள்.