கோவில்பட்டியில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஹெல்த் கிட் வழங்கப்பட்டது..



கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் உலகத் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஹெல்த் கிட் வழங்கும் விழா கோவில்பட்டி நகராட்சி நகர் நல மையத்தில் வைத்து நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் 7ம் தேதிவரை தாய்ப்பாலின் அவசியம் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலகத் தாய்ப்பால் வாரம் உலக நாடெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டு ஆரோக்கியமான உலகத்தை உருவாக்கிட தாய்ப்பால் கொடுப்பதை ஆதரிப்போம் என்ற மையக் கருத்தை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தப்படுகிறது.கோவில்பட்டி நகர் நல மையத்தில் நடந்த விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு பேரிச்சம் பழம், எலுமிச்சம்பழம்,முக கவசம், சோப்பு உள்ளிட்ட ஹெல்த் கிட் வழங்கப்பட்டது. அனைவருக்கும் தாய்ப்பால் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார்.ரோட்டரி சங்க செயலாளர் கண்ணன்
நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுரேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் நல மைய செவிலியர் தனலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.நகராட்சி நகர் நல மைய மருத்துவ அலுவலர்கள் அஜய் சங்கர், மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஹெல்த் கிட் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பேசினர்.விழாவில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்து முருகன், நடராசன், பிரபாகரன் உள்ளிட்ட பலர் முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைபிடித்தும் கலந்து கொண்டனர். முடிவில் நகர்நல மைய செவிலியர் காயத்ரி நன்றி கூறினார்...