top of page

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆவின் பாலகம் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்துவைத்தார்

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் புதிதாக தொடங்கியிருக்கும் ஆவின் பாலகத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்..








திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள வளாகத்தில் பொதுமக்கள், காவல்துறையினர் பயன்படும் வகையில் புதிதாக ஆவின் பாலகம் அமைக்கப்பட்டுள்ளது.


ஆவின் பாலகத்தை இன்று 11.10.2021ம் தேதி *திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ‌கா.ப அவர்கள்.,* பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அப்போது முதல் விற்பனையை தொடங்கி வைத்து உரையாற்றிய காவல் கண்காணிப்பாளர் அவர்கள் புதிதாக தொடங்கியுள்ள ஆவின் பாலகத்தில் ஆவின் நிறுவனத்தை சார்ந்த பால், நெய், ஐஸ்கிரீம், கூல்டிரிங்ஸ்,இனிப்புவகைகள் அனைத்தும் விற்கப்படும் எனவும் பொதுமக்கள் அனைவரும் வாங்கி பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


*இத்திறப்பு விழாவில் தனிப்பிரிவு ஆய்வாளர் திரு.ராஜேஷ், திருநெல்வேலி மாவட்ட ஆவின் நிறுவன மேலாளர் திரு. சுந்தரவடிவேல், உதவி மேலாளர் திருமதி.சாந்தி, திருநெல்வேலி மாவட்ட மேலாளர் (MARKETING)திருமதி. அனுஷா சிங், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.*

15 views0 comments
bottom of page