இந்நிலையில் இதுவரை 144 தடை உத்தரவை மீறி வெளியே சுற்றித் திரிந்த 6535 நபர்கள் மீது வழக்கு...

திருநெல்வேலி மாவட்டம் 27.05.2020
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாவரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் வைரஸ் தொற்று பரவக்கூடும் என்பதால் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினரின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுவரை 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்த 6535 நபர்கள் மீது 4377 வழக்குகள் பதிவு செய்து அவர்களிடமிருந்து 4315 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது...
News sponser : https://lapureherbals.in/
