பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
திருநெல்வேலி மாவட்டம் (15.02.2020) சேரன்மகாதேவி காவல் நிலைய பிரிவு 147,148,341,294(b),302,506(ii),120(b)IPC, பிரிவு 353,324,307,506(ii)IPC வழக்குகளில் எதிரிகளான *முருகன்@பீங்கான்முருகன் (37) த/பெ கிருஷ்ணன்* சேரன்மகாதேவி, *ஆனந்த@அருணாச்சலம்(26) த/பெ கணேசன்* சேரன்மகாதேவி, என்பவர்கள் அடிக்கடி சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருவதாக திருநெல்வேலி *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா இ.கா.ப* அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி எதிரிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க *சேரன்மகாதேவி காவல் நிலைய ஆய்வாளர் திரு.A.T.ராஜாராம்* அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், எதிரிகள் முருகன்@பீங்கான்முருகன், ஆனந்த்@அருணாச்சலம் ஆகியோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் பாளை மத்திய சிறையில் 15.02.2020 தேதி அடைக்கப்பட்டனர்.

*சமூக ஊடகவியல் பிரிவு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை*