நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பெண்களுக்கான கைவினை பயிற்சி வகுப்புகள்
இன்று நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பெண்களுக்கான கைவினை பயிற்சி வகுப்புகள் காலையில் காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி அவர்களால் துவங்கப்பட்டது.இன்று நடைபெற்ற பயிற்சி வகுப்பில் பனை ஓலை கொண்டு பல பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி நடத்தப்பட்டது .இன்று நடைபெற்ற பயிற்சியில் பனை ஓலை கொண்டு அழகிய பூக்கள் பூக்கூடை மற்றும் மோதிரம் ஆகியவை தயாரிக்கும் பயிற்சி நடத்தப்பட்டது.இப் பயிற்சியினை சங்கரன்கோயில் தேவர்குளம் பகுதியினை சார்ந்த அந்தோணி அம்மாள் மற்றும் ஜோதி ஆகியோர் நடத்தினர் ஏராளமான பெண்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர்.