நாங்குநேரியில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட இரண்டு பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.
*நாங்குநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட இரண்டு பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.*

திருநெல்வேலி மாவட்டம் (18.02.2020) நாங்குநேரி காவல் நிலையம் பிரிவு 8(c),20(b)(ii)(A) போதை மருந்துகள் மன மயக்கபொருட்கள் சட்டம் குற்ற எண்.20/20 பிரிவு 8(c),20(c)(ii)(B) போதை மருந்துகள் மன மயக்கபொருட்கள் சட்டம் வழக்குகளில் எதிரிகளான *பழனி(59) த/பெ சுப்பையா* நாங்குநேரி, *துரைப்பாண்டில(26) த/பெ பழனி* நாங்குநேரி, என்பவர்கள் அடிக்கடி சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருவதாக திருநெல்வேலி *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா இ.கா.ப* அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி எதிரிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க *நாங்குநேரி காவல் நிலைய ஆய்வாளர் திரு. சபாபதி* அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், எதிரிகள் பழனி, துரைப்பாண்டி ஆகியோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் பாளை மத்திய சிறையில் 18.02.2020 தேதி அடைக்கப்பட்டனர். *சமூக ஊடகவியல் பிரிவு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை*