திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது
திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் மாவட்ட காவல் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டு, மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.சிலம்பரசன், அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
முன்னதாக மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் காவலர்கள் அவசர காலங்களில் பணிக்கு செல்லும் வாகனங்கள், உயரதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்கள், நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறதா என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வாகன ஓட்டுநர்ளுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கி, வாகனங்களின் நிறை குறைகளை கேட்டு தெரிந்து கொண்டார்.
பின் மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு 5 மாதங்கள் தலைமறைவாக இருந்த பிடியாணை எதிரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்த உதவி ஆய்வாளர் திரு.கணேஷ்குமார்,முதல் நிலைக் காவலர்கள் திரு.அஜிஷ், திரு.முத்துபாண்டி, திரு.சாலமோன் ஆகியோருக்கும்,
பத்திற்கும் மேற்பட்ட வழக்குகளில் தலைமறைவாக இருந்த பிடியாணை எதிரியை கைது செய்ததற்காக நாங்குநேரி வட்ட காவல் ஆய்வாளர் திருமதி.செல்வி, முதல்நிலை காவலர்கள் திரு.காசி, திரு.சங்கரபாண்டி ஆகியோருக்கும்
கங்கைகொண்டான் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் லாரியை திருடி சென்ற நபரை துரிதமாக செயல்பட்டு விரைந்து கைது செய்து லாரியை மீட்ட முதல்நிலை காவலர் திரு.கருத்தபாண்டி, சிறப்பு காவல்படை காவலர் திரு.அஜய், ஆகியோருக்கும்,
தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக ஆயுதத்தால் தாக்க வந்த நபர்களை துரிதமாக செய்ல்பட்டு தடுத்து சிறப்பாக பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சேக் முகமது சிராஜுதின், முதல்நிலை காவலர் திரு.ராஜ்குமார் மற்றும் வாகன தணிக்கையின் போது கொலை முயற்சி வழக்கின் எதிரியை பிடித்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.மாரியப்பன், முதல்நிலை காவலர் திரு.கணேசன் மற்றும் கல்லிடை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் திருடு போன இருசக்கர வாகனத்தை 4 மணி நேரத்தில் கண்டுபிடித்த முதல்நிலை காவலர்கள் திரு.திவான்சா சேக் ஃபரித், திரு.பசீர் முகமது ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.பாலச்சந்திரன், திரு.ஆறுமுகம் மற்றும் அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.