தென்காசி காவல் துறை சார்பாக முக்கிய அறிவிப்பு
காய்கறி கடைகள் இயகங்கும் இடங்கள் மற்றும் நேரம்
1) பழைய பேருந்து நிலையம்
2) வழக்கமான காய்கறி மார்கெட் (RC சர்ச் அருகே)
நேரம் : காலை 7 முதல் 12 மணி வரை
மாமிச கடைகள் இயங்கும் இடம் மற்றும் நேரம்
புதிய பேருந்து நிலையம்
நேரம் : காலை 7 முதல் 12 மணி வரை
பால் விற்பனை அதே இடத்தில் நடக்கும்
நேரம் : காலை 3 .30 முதல் 9 மணி வரை
மெடிக்கல் வழக்கம் போல் அது சம்பந்தபந்தமான இடங்களில் இயங்கும்
நேரம் : 24 மணி நேரம்
மளிகை கடைகள்
அதே இடங்களில் இயங்கும்
நேரம் : காலை 7 மணி முதல் 12 மணி வரை
உணவகங்கள்
காலை 7 to 9
மதியம் 12 to 2.30
மாலை 6 to 09
(பார்சல் மட்டும் கொடுக்க வேண்டும்)
மேற்படி அத்தியாவசிய கடைகள் தவிர எந்த கடைகளும் திறக்க அனுமதி இல்லை
அறிவுரைகள்
தென்காசி நகர பொதுமக்கள் மேற்படி பொருட்களை வாங்க ஒதுக்கப்பட்டுள்ள இடம் மற்றும் நேரங்களை பயன்படுத்தி கொள்ளவும்
அந்த இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இடைவெளி கோடுகளில் தனித்தனியே நின்று வாங்கி கொள்ளவும்
வீட்டில் இருந்து ஒரு நபர் மட்டும் வந்து தேவையான பொருள்களை வாங்கி செல்லவும்
மற்ற நேரங்களில் தேவை இல்லாமல் சுற்றி திரிய வேண்டாம்
வீட்டில் உள்ள பெரியவர்கள் தங்கள் வீட்டில் உள்ள வயதானவர்கள் குழந்தைகளை வெளியில் அனுப்ப வேண்டாம்
வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய உடன் கை கால்களை சோப்பு போட்டு நன்கு கழுவி கொள்ளவும்
வெளியில் வரும்போது எதாவது முக கவசம் அணிந்து வரவும்
இளைஞர்கள் தேவை இல்லாமல் இரண்டு நான்கு சக்கர வாகனங்களில் ஊர் சுற்ற வேண்டாம்
அரசுக்கும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறோம்
தென்காசி காவல்துறை