top of page

குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் தாழையுத்துமுருகன்@பேய்முருகன் கைது..

*திருநெல்வேலி மாவட்டம்* (14.02.2020)

தாழையுத்து காவல் நிலைய குற்ற எண்:பிரிவு 294(b),307,506(ii)IPC மற்றும் குற்ற எண்: பிரிவு 294(b),387,506(ii)IPC வழக்குகளில் எதிரியான *முருகன்@பேய்முருகன் (29) த/பெ குமாரைய்யா* பூந்தோட்ட நகர், தாழையுத்து, என்பவர் அடிக்கடி சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருவதாக திருநெல்வேலி *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா இ.கா.ப* அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி எதிரியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க *தாழையுத்து காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ஜெயந்தி* அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், எதிரி முருகன்@பேய்முருகன் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் பாளை மத்திய சிறையில் 14.02.2020 தேதி அடைக்கப்பட்டார். *சமூக ஊடகவியல் பிரிவு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை*

2 views0 comments
bottom of page