களக்காடு காவல் நிலைய எல்லைக்குள் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 5 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

திருநெல்வேலி மாவட்டம் (18.02.2020) களக்காடு காவல் நிலையத்தில் இ.த.ச பிரிவு 147,148,341,294(b),302,324,506(ii)IPC வழக்கில் எதிரிகளான சிங்கிகுளம் பகுதியை சேர்ந்தவர்களான *சுரேஷ்(22) த/பெ ஆறுமுகநயினார், சுரேஷ் (18) த/பெ முருகன், பவி@பவித்ரன் (19) த/பெ இசக்கிபாண்டி, மணிகண்டன் (22) த/பெ அங்கப்பன், முத்து சுரேஷ் (20) த/பெ முருகன்* என்பவர்கள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பதாக திருநெல்வேலி *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா இ.கா.ப* அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி எதிரிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க *களக்காடு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.மேரி ஜெமிதா* அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், எதிரிகள் ஆ.சுரேஷ் மு.சுரேஷ் பவி@பவித்ரன், மணிகண்டன், முத்துசுரேஷ், ஆகியோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் பாளை மத்திய சிறையில் 18.02.2020 தேதி அடைக்கப்பட்டனர். *சமூக ஊடகவியல் பிரிவு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை*